
புதுக்கோட்டை: மீமிசல் அருகே தொழிலதிபர் வீட்டில் 750 பவுன் நகைகள் திருடுபோனதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே உள்ள கோபாலபட்டினத்தைச் சேர்ந்தவர் ஜகுபர் சாதிக் (50). இவர், புரூணை நாட்டில் 7 இடங்களில் சூப்பர் மார்க்கெட் வைத்துள்ளார். குடும்பத்தினருடன் அங்கேயே தங்கியுள்ளார். 30 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு தொழில் செய்து வரும் ஜகுபர் சாதிக், 3 மாதங்களுக்கு ஒருமுறை சொந்த ஊருக்கு வந்து செல்வது வழக்கம். கரோனா பரவல் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இவர் ஊருக்கு வரவில்லை. பள்ளிவாசல் கட்டுதல் போன்ற இறை பணிக்கும், இயலா நிலையில் உதவி கேட்டு வருவோருக்கும் ஜகுபர் சாதிக் நிறைய உதவி செய்துவந்ததாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3z3jSIE
0 Comments