Crime

திருப்பூர்: சேவூர் அருகே அ.குரும்பபாளையத்தில் நில மோசடியில் ரூ.60 லட்சம்ஏமாற்றப்பட்டதாக ஆட்சியரிடம் புகார் அளித்த பெண், விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாக இருவரை சேவூர் போலீஸார் கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டம் அவிநாசி வட்டம் சேவூர் அருகே உள்ள அ.குரும்பபாளையத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி (55). இவரது மனைவி ஷீலா தேவி (35). இவர்களது மகள் ஸ்ரீநிதி (9). இவர்கள் 3 பேரும், கடந்த 13-ம் தேதி திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். அம்மனுவில், ‘தங்களுக்கு சொந்தமான அ.குரும்பபாளையத்தில் 45 சென்ட் நிலத்துக்கான ஆவணத்தை அடமானமாக வைத்து, திருப்பூர் போயம்பாளையம் குருவாயூரப்பன் நகரை சேர்ந்த சிவராஜ் என்பவரிடம் பணம் பெற்றோம். நிலத்தை விற்பனை செய்த வகையில் ரூ.60 லட்சத்தை சிவராஜ் கொடுக்காமல் மோசடி செய்துவிட்டார். அதை மீட்டுத்தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என குறிப்பிட்டிருந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/30Y0ekJ

Post a Comment

0 Comments