Crime

வேலூர்: வேலூர் - காட்பாடி சாலையில் உள்ள பிரபல நகைக் கடையின் பின்பக்க சுவரில் துளையிட்டு உள்ளே நுழைந்த மர்ம நபர்கள், 16 கிலோ நகைகளை திருடிச் சென்றனர்.

வேலூர் தோட்டப்பாளையம் காட்பாடி சாலையில், கேரளாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் பிரபல நகைக் கடையின் கிளை அமைந்துள்ளது. இந்த நகைக் கடையில் 30-க்கும்மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம்இரவு 10 மணிக்கு வியாபாரம் முடிந்து கடையை ஊழியர்கள் வழக்கம்போல் பூட்டிச் சென்றனர். நேற்று காலை 9.30 மணிக்கு ஊழியர்கள் வந்து கடையை திறந்தபோது திருட்டு நடந்திருப்பது தெரியவந்தது. தங்கம் மற்றும் வைர நகைகள்இருந்த பகுதிகளில் 16 கிலோ நகைகள் திருடு போனது தெரியவந்தது. கடையின் மேல் தளத்தில் உள்ள சுவரில் துளை போடப்பட்டு, மேல்தளத்தில் இருந்து தரைத்தளத்துக்கு நடுவே உள்ள சிமென்ட் தளத்தை (சீலிங் சிலாப்) உடைத்து உள்ளே புகுந்தமர்ம நபர்கள் கைவரிசை காட்டிஉள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3E279qB

Post a Comment

0 Comments