Crime

போலியான செயலிகள் மூலம் கிரிப்டோகரன்சி மோசடிகள் நடந்து வருவது குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று சைபர் கிரைம் போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

சென்னையில் பணியாற்றும் ஐ.டி ஊழியர் ஒருவர், ஒரு டேட்டிங்செயலியில் தனது சுய விவரக் குறிப்புகளை பதிவேற்றி உள்ளார். இதையடுத்து அவரிடம் பெண் ஒருவர், சீனாவிலிருந்து பேசுவதாகக் கூறிஅறிமுகமாகியுள்ளார். மேலும் அவரைக் காதலிப்பதாகவும் கூறிய பெண், தான் சொல்லும் இணையதளத்தில் இந்திய பணத்தை கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்தால் குறிப்பிட்ட காலத்துக்குள் கோடீஸ்வரராக மாறிவிடலாம் எனவும், அதன்பிறகு இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் எனவும் ஆசை வார்த்தை கூறியுள்ளார். அதை நம்பி, சீன பெண் கூறிய டிரேடிங் செயலி மூலமாக பணத்தை முதலீடு செய்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3pDHjFj

Post a Comment

0 Comments