
பல்லடம் சார் நிலை கருவூலத்தில் கொள்ளை முயற்சி வழக்கில் மூளையாகச் செயல்பட்ட மங்கலம் காவலர் தலைமறைவான நிலையில், அவரைப் பணியிடை நீக்கம் செய்து திருப்பூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சசாங் சாய் உத்தரவிட்டார்.
பல்லடத்தில் சார் நிலை கருவூலம் உள்ளது. இந்தக் கருவூலத்துக்குக் கடந்த 8-ம் தேதி காலை வழக்கம் போல் அலுவலர்கள் பணிக்கு வந்தனர். அப்போது, சார் நிலை கருவூலத்தின் கதவு மற்றும் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது, அங்கிருந்த லாக்கரின் பூட்டும் சேதமடைந்திருந்தது. லாக்கரை உடைக்க முடியாத நிலையில், அது சேதமான நிலையில் தப்பியது. இது தொடர்பாக பல்லடம் சார் நிலை கருவூலர் மீனாட்சி பல்லடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து அங்கு வைக்கப்பட்டிருந்த கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளைக் கொண்டு போலீஸார் விசாரித்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3172o1i
0 Comments