Crime

போலி ஆவணங்களை வைத்து நிதி மோசடியில் ஈடுபட்ட நபருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை, 1 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை மண்ணடி பகுதியில் உள்ள மூர் தெருவைச் சேர்ந்தவர் லியாகத் அலி. துபாய் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள மின்னணு சாதனங்களைச் சரக்கு விமானங்களிலும், கப்பல்கள் மூலமாகவும் இறக்குமதி செய்ததாக லியாகத் அலி போலி ஆவணங்களை உருவாக்கி பெருமளவில் நிதி மோசடி செய்திருக்கிறார். இதன் மூலமாகக் கணக்கில் வராத பணத்தை வெளிநாடுகளுக்கு அனுப்பியதை அறிந்த சென்னை மண்டல மத்திய அமலாக்கத்துறை, சிறப்பு தனிப்படை அமைத்து லியாகத் அலியைக் கைது செய்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3CI2pGW

Post a Comment

0 Comments