
குஜராத் மாநிலத்தில் ஹெராயின் கடத்தல் வழக்கில் கைதான நபரின் கோவை வீட்டில் தேசிய புலனாய்வு முகமை( என்.ஐ.ஏ) அதிகாரிகள்நேற்று (9-ம் தேதி) சோதனை நடத்தினர்.
கோவை மாவட்டம், வடவள்ளி அருகேயுள்ள அருண் நகர், 3வது வீதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார்(56). இவர் சில வாரங்களுக்கு முன்னர் குஜராத் மாநிலத்தில் நடந்த ஹெராயின் போதைப்பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக என்.ஐ.ஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட அவர் தற்போது குஜராத் மாநிலம், பூஜ் சிறையில் உள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3mHToGQ
0 Comments