
தமிழக - ஆந்திர எல்லைப் பகுதிகளில் மதுவிலக்கு தடுப்புப் பிரிவு போலீஸார் கடந்த 2 நாட்களாக நடத்திய ரெய்டில் 5 பெண்கள் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து 330 லிட்டர் சாராயம், 2,300 லிட்டர் சாராய ஊறல்களை போலீஸார் அழித்தனர்.
தமிழகத்தில் முழு ஊரடங்கையொட்டி அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து, மதுப்பிரியர்களின் தேவையைப் போக்க, ஆந்திர மாநிலத்தில் காய்ச்சப்படும் கள்ளச்சாராயம் தமிழகத்துக்குக் கடத்தி வரப்பட்டு, பாக்கெட்டுகளில் நிரப்பி ஊருக்கு ஒதுக்குப்புறமான பகுதிகளில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக, திருப்பத்தூர் எஸ்.பி. விஜயகுமாருக்குப் பொதுமக்கள் புகார் அளித்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3bBxr7B
0 Comments