
ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு ஆதரவாளராகச் செயல்பட்டவருடன் வாட்ஸ் அப் தொடர்பில் இருந்த நபரது வீட்டில் என்ஐஏ (தேசியப் புலனாய்வு முகமை) அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் செயல்பாடுகள் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளன. அந்த அமைப்பு தீவிரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டு, அந்த அமைப்புக்கு ஆதரவாகச் செயல்படுவோர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் முகநூலில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு ஆதரவாளராகச் செயல்பட்டதாகவும், சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பதிவிட்டதாகவும் கூறி மதுரையைச் சேர்ந்த முகமது இக்பால் என்பவர் கடந்த டிசம்பர் மாதம் 2-ம் தேதி தமிழகக் காவல் துறையால் கைது செய்யப்பட்டார். தற்போது இவ்விவகாரம் தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3hs3XNn
0 Comments