Crime

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு படகில் கடத்த முயன்ற ரூ.10 லட்சம் மதிப்புள்ள மஞ்சள், பீடி இலை, வெங்காய விதை ஆகியவற்றை கியூ பிரிவு போலீஸார் பறிமுதல் செய்தனர்.

தூத்துக்குடி தாளமுத்துநகர் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு படகு மூலம் பல்வேறு பொருட்கள் கடத்தப்படுவதாக கியூ பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் ஆய்வாளர் விஜய அனிதா, உதவி ஆய்வாளர்கள் ஜீவமணி தர்மராஜ், வேலாயுதம் ஆகியோர் தலைமையில் கியூ பிரிவு போலீஸார் நேற்று இரவு தாளமுத்துநகர் கடற்கரை பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3xqKGRR

Post a Comment

0 Comments