Crime

பாலியல் தொல்லை கொடுத்ததாக பெண் எஸ்.பி அளித்த புகாரின் பேரில் சிக்கிய சிறப்பு டிஜிபியை தமிழக அரசு சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது. உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து பதிவு செய்த வழக்கில் இதுவரை ஏன் சஸ்பெண்ட் செய்யவில்லை என கேள்வி எழுப்பியிருந்த நிலையில் அவர் நேற்றிரவு சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

தமிழக சட்டம் - ஒழுங்கு சிறப்பு டிஜிபி தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக பெண் எஸ்.பி. ஒருவர் காவல் துறை தலைவர் திரிபாதி, தலைமைச் செயலர் உள்ளிட்டோரிடம் புகார் அளித்தார். இந்த விவகாரம் வெளியே கசிந்த நிலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/38VJfk1

Post a Comment

0 Comments