Crime

சென்னையில் தனியார் மருத்துவமனையில் கொள்ளையடித்த கூலிப்படை கும்பல், அங்கிருந்த மருத்துவரின் காரையும் திருடிச் சென்றது. நீண்ட தேடலுக்குப் பின் சிக்கியவர்களை போலீஸார் விசாரித்தபோது இரட்டைக் கொலை செய்து உடல்களைக் கிணற்றில் வீசிச் சென்றது அம்பலமானது.

சென்னை, சைதாப்பேட்டை போலீஸ் எல்லைக்குட்பட்ட நந்தனத்தில் தனியார் மருத்துவமனை உள்ளது. இங்கு கடந்த 13ஆம் தேதி இரவு 10.30 மணி அளவில் ஒரு கும்பல் திடீரென புகுந்தது. அங்கிருந்த மூத்த மருத்துவர் ராமகிருஷ்ணனை (72) கத்தி முனையில் மிரட்டிய கும்பல், பணம் பறித்தது. மருத்துவமனை செவிலியர்கள் 4 பேரை மிரட்டி 21 சவரன் நகை, வெள்ளிப் பொருட்கள், செல்போனைக் கொள்ளையடித்து மருத்துவரின் காரில் ஏறித் தப்பிச் சென்றது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3cXaBY7

Post a Comment

0 Comments