Crime

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில், 4 வீடுகளில் 45 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ. 2.70 லட்சம் ரொக்கம் கொள்ளை போனது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி புதிய வீட்டு வசதி வாரியக் குடியிருப்புப் பகுதியில் வசித்து வருபவர் ராஜேந்திரன் (57). இவர் மின்சார வாரியத்தில் மேற்பார்வையாளராகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், சாமல்பட்டியில் தனது மாமனார் இறந்துவிட்டதால், அவரது இறுதிச் சடங்கிற்கு கடந்த 26-ம் தேதி வீட்டைப் பூட்டிவிட்டு, குடும்பத்தினருடன் அங்கு சென்றுவிட்டார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/36pH3jk

Post a Comment

0 Comments