Crime

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை மறைத்து வைத்து சில்லறைக் கடைகளுக்கு விநியோகம் செய்துவந்த நபர் உட்பட இருவரை போலீஸார் கைது செய்தனர். ரூ.8 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

விழுப்புரம் மாவட்டத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்கப்படுவதாக எஸ்.பி. ராதாகிருஷ்ணனுக்குக் கிடைத்த ரகசியத் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், அவரின் உத்தரவின் பேரில் ஏடிஎஸ்பி தேவநாதன் மற்றும் டிஎஸ்பி நல்லசிவம் தலைமையிலான தனிப்படை போலீஸார் மற்றும் விழுப்புரம் மேற்கு காவல் நிலைய போலீஸார் நேற்று விழுப்புரம், அலமேலுபுரம் அருகே ஸ்கூட்டியில் வந்த அலமேலுபுரம் மாம்பழப்பட்டு ரோட்டைச் சேர்ந்த முருகேசன் (48) என்பவரை மறித்து சோதனை செய்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3i6JXOD

Post a Comment

0 Comments