
சென்னை ஆயுதப்படையில் காவலர்களாக உள்ள கிரேட்-1 போலீஸார் 2200 பேரை சென்னை காவல்துறைக்கு நேரடியாக பணிமாற்றம் செய்ய காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார். இவர்கள் காவல் நிலையங்கள் உள்ளிட்ட சென்னை காவல்துறையின் பல்வேறு பிரிவுகளுக்கு அனுப்பப்படுவார்கள்.
தமிழக காவல்துறை 4 பிரிவுகளாக இயங்குகிறது. சிறப்பு காவல்படை மூலம் பணிக்கு வருபவர்கள், நேரடி எஸ்.ஐ.ஆக பணிக்கு வருபவர்கள், குரூப்-1 தேர்வெழுதி பணிக்கு வருபவர்கள், ஐபிஎஸ் பாஸ் செய்து பணிக்கு வருபவர்கள் என காவல்துறையின் பல்வேறு நிலை காவலர்கள் முதல் அதிகாரிகள் வரை நியமனம் நடைபெறுகிறது. பதவி உயர்வு மூலம் வருவது தனி.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2JChuTX
0 Comments