Crime

வங்கி மேலாளர் பேசுவதாக கூறி அடுத்தடுத்து 9 பேரிடம் பண மோசடி செய்யப்பட்டுள்ளது. இந்த பணத்தை கீழ்ப்பாக்கம் சைபர் குற்றப்பிரிவு போலீஸார் மீட்டுக் கொடுத்துள்ளனர்.

சென்னை, சூளை, சாமிபிள்ளை தெரு பகுதியில் வசிப்பவர் கன்னியம்மாள். இவர் வங்கி ஒன்றில் கணக்கு தொடங்கி ஏடிஎம் கார்டு வைத்துள்ளார். கடந்த 12-ம் தேதிகன்னியம்மாளை தொடர்பு கொண்ட அடையாளம் தெரியாத நபர் ஒருவர், ‘‘வங்கி மேலாளர்பேசுகிறேன். உங்களது வங்கி கணக்கு, ஏடிஎம் கார்டு விவரங்களை உடனடியாக தெரிவிக்க வேண்டும். இல்லை என்றால்உங்களது ஏடிஎம் கார்டு முடக்கப்படும்’’ என தெரிவித்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2HvSqfP

Post a Comment

0 Comments