Crime

பொதுமக்களிடம் வழிப்பறி செய்யப்படும் செல்போன்களின் ஐஎம்இஐ எண்களை மாற்றி, வெளி மாநிலங்களுக்கு விற்பனை செய்த இடைத்தரகர்கள் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.6 லட்சம் மதிப்பிலான 50 செல்போன்கள் கைப்பற்றப்பட்டன.

சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் பொதுமக்களிடம் வழிப்பறி செய்யப்படும் செல்போன்கள் மூர்மார்க்கெட், பர்மா பஜார், பாரிமுனை ஆகிய பகுதிகளில் விற்கப்படுவதை போலீஸார் கண்டுபிடித்தனர். செல்போனின் ஐஎம்இஐ எண்களை மாற்றி, புதிய செல்போன்கள் போலவே அவற்றை மாற்றம் செய்து, ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கு ஒரு கும்பல் விற்று வருவதும் தெரியவந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/37xFnpl

Post a Comment

0 Comments