
தக்கலையில் தனது சொந்த மகள்கள் 3 பேர் உட்பட 4 சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கொடூர தாய் உட்பட 3 பேரை போலீஸார் கைது செய்தனர். சிறுமிகள் 4 பேரும் மீட்கப்பட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை மேட்டுக்கடை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பாலியல் தொழில் நடைபெறுவதாக போலீஸாருக்கு புகார்கள் வந்தன. அங்கு போலீஸார் அந்த வீட்டில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, 2 அறைகளில் சிறுமிகளுடன் இருந்த ஆண்கள் 2 பேர் தப்பி ஓட முயன்றனர். அவர்களை போலீஸார் சுற்றிவளைத்து பிடித்து விசாரணை நடத்தினர். இதில், ஒருவர் திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூர் காவல் நிலையத்தில் பணியாற்றும் பெண் காவல் ஆய்வாளரின் கணவரான குளச்சல் பகுதியைச் சேர்ந்த ராஜ்மோகன் என்பதும், மற்றொருவர் தக்கலையைச் சேர்ந்த தொழிலாளி சுனில் என்பதும் தெரியவந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3mXLQiB
0 Comments