
காஞ்சிபுரம் மாவட்டத்தில் தலைமறைவாக இருந்த 87 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 5 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டிஐஜி சாமுண்டீஸ்வரி உத்தரவின் அடிப்படையில், காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகப்பிரியா தலைமையில் 6 ரவுடிகள் ஒழிப்புப் படைகள் உருவாக்கப்பட்டன. இவர்கள் கடந்த 2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த 87 ரவுடிகளை கடந்த ஒரு மாதத்தில் கைது செய்துள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/32R0dMq
0 Comments