
'கலாட்டா நடக்குது. நகையைக் கழற்றி பையில் வைத்துக்கொண்டு போங்கம்மா' என்று திருவல்லிக்கேணி பைகிராப்ட்ஸ் சாலையில் போலீஸ் போல் நடித்து, நகைகளை பேப்பரில் மடித்துத் தருவதுபோல் கவனத்தைத் திசைதிருப்பி 10 சவரன் நகைகளை மூதாட்டியிடமிருந்து 2 நபர்கள் பறித்துச் சென்றுள்ளனர்.
திருட்டு, வழிப்பறி நடப்பதில் பலவகை உண்டு. இதில் செயின் பறிப்பு, செல்போன் பறிப்பு, கத்தியைக் காட்டி வழிப்பறி என சென்னையில் அடிக்கடி நடப்பதுண்டு. இதுதவிர கவனத்தைத் திசைதிருப்பி வழிப்பறி செய்வதும் அதிகமாக நடக்கிறது. இந்த வகை திருடர்கள் சாமர்த்தியமாக பொதுமக்களிடம் பேசி கவனத்தைத் திசைதிருப்பி பணம், நகைகளைப் பறித்துச் சென்றுவிடுவார்கள்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/35SfsrM
0 Comments