Crime

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே எளாவூர் போக்குவரத்து சோதனைச்சாவடியில் லஞ்ச ஒழிப்பு துறையினர் இன்று அதிகாலை அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இச்சோதனையில் ரூ.3.54 லட்சம் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டன.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே உள்ள தமிழக - ஆந்திர எல்லையான எளாவூர் பகுதியில் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடி செயல்பட்டு வருகிறது. இந்த சோதனைச் சாவடி வளாகத்தில் உள்ள போக்குவரத்து சோதனைச் சாவடியில் வாகனங்களுக்கு உரிமம் வழங்குவது உள்ளிட்டவை தொடர்பாக லஞ்சம் பெறப்படுவதாக லாரி உரிமையாளர்கள் தரப்பில் லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு புகார் சென்றதாக கூறப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Z2GbsPw

Post a Comment

0 Comments