
சென்னை: சினிமாத் துறை கேமரா உதவியாளரைத் தாக்கி பணப்பறிப்பில் ஈடுபட்ட பொறியியல் மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை சாலிகிராமம், பெரியார் தெருவில் வசிப்பவர் ரெக்ஸன் (25). சினிமா துறையில் கேமரா உதவியாளராக வேலை செய்து வருகிறார்.
இவர் நேற்று முன்தினம் அதிகாலை கோயம்பேடு, பூந்தமல்லி நெடுஞ்சாலை அருகே நண்பருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர், ரெக்ஸனை தாக்கிவிட்டு அவரிடமிருந்த பணத்தை பறித்துக் கொண்டு தப்பினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/AiqERym
0 Comments