
தூத்துக்குடி: திருச்செந்தூர் அருகே உள்ள ஆலந்தலை சுனாமி நகரைச் சேர்ந்த முருகன் மகன் மணிகண்டன் (24). எலெக்ட்ரீசியனான இவர், திருச்செந்தூரை சேர்ந்த 18 வயது பெண்ணை காதலித்து வந்தார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இவர்கள் இருவரும் தலைமறைவாயினர். தனது மகளைக் காணவில்லை என, திருச்செந்தூர் கோயில் காவல் நிலையத்தில் அப்பெண்ணின் தந்தை புகார் அளித்தார்.
அதைத் தொடர்ந்து புதுச்சேரியில் இருந்த அந்தப் பெண்ணை மீட்டு பெற்றோரிடம் போலீஸார் ஒப்படைத்தனர்.இதுதொடர்பாக, மணிகண்ட னுக்கும், பெண்ணின் வீட்டினருக்கும் இடையே முன் விரோதம் இருந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/p6YtWTQ
0 Comments