Crime

தங்கம் கடத்தல் வழக்கு தொடர்பாக சென்னையில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு விமான நிலையங்களில் தங்கம் கடத்தல் சம்பவங்கள் சமீப காலமாக அதிகரித்து வருகின்றன. இந்த கடத்தலுக்கு சுங்கத்துறை மற்றும் மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் சிலர் துணை போவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. அண்மையில் துபாயில் இருந்து பெங்களூருவுக்கு விமானம் மூலம் தங்கம் கடத்திய வழக்கில் கன்னட நடிகை கைது செய்யப்பட்டார்.

இவர், கிட்டத்தட்ட ரூ.12.56 கோடி மதிப்புள்ள 14.2 கிலோ தங்கத்தை பலமுறை தனது விமான பயணத்தின் மூலம் கடத்தியதாக குற்றம்சாட்டப் பட்டது. இந்த கடத்தலுக்கு மத்திய அரசு ஊழியர்கள் சிலர் ஆதாயம் பெற்று உதவியதாகவும் சிபிஐ குற்றம்சாட்டியது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/1POohgM

Post a Comment

0 Comments