
கடலூர்: சிதம்பரத்தில் உள்ள கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடலூரில் இருந்து வந்திருந்த வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்கள் சோதனையில் ஈடுபட்டனர்.
சிதம்பரம் அண்ணாமலை நகரில் கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளது. இந்த நிலையில் இன்று (ஆக.28) காலை 10 மணி அளவில் மருத்துவக் கல்லூரி டீன் அலுவலகத்துக்கு ஒரு தொலைபேசி வந்தது. அதில் பேசியவர் மருத்துவக் கல்லூரியில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறி தொலைபேசியை துண்டித்துள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ge1ylmM
0 Comments