
சிவகங்கை: இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் சிவகங்கை பாஜக நிர்வாகி கொலை செய்யப்பட்டார். சிவகங்கை மஜித் சாலையைச் சேர்ந்தவர் சதீஷ்குமார்(53). பாஜக மாவட்ட வர்த்தக பிரிவுச் செயலாளரான இவர், வாரச்சந்தை சாலையில் இருசக்கர வாகனம் பழுதுநீக்கும் கடை நடத்தி வந்தார்.
அங்கு மணிபாரதி என்பவர் பணிபுரிந்தார். இருவரும் ஓய்வுக்காக கடை அருகே வாடகைக்கு அறை எடுத்துத் தங்கினர். அவர்களது அறைக்கு அருகேயுள்ள மற்றொரு அறையில், ‘ட்ரம்செட்’ அடிக்கும் தொழிலாளர்கள் சிலர் தங்கியிருந்தனர். இந்நிலையில், நேற்று முன் தினம் இரவு இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தக ராறில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/uHIzebl
0 Comments