
ஈரோடு: சிவகிரியில் வயதான தம்பதி கொல்லப்பட்ட வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பல்லடம் அருகே மூவர் கொல்லப்பட்ட வழக்கிலும் தொடர்புள்ளதாக மேற்கு மண்டல ஐ.ஜி. செந்தில்குமார் கூறினார்.
ஈரோடு மாவட்டம் சிவகிரி அடுத்த விளக்கேத்தி மேகரையான் தோட்டத்தில் வசித்து வந்த ராமசாமி(72), அவரது மனைவி பாக்கியம்(63) ஆகியோர் பணம், நகைக்காக ஏப்ரல் 28-ம் தேதி கொலை செய்யப்பட்டனர். குற்றவாளிகளைக் கண்டறிய ஈரோடு எஸ்.பி. சுஜாதா தலைமையில் 12 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்நிலையில், கொலை வழக்கில் தொடர்புடைய 4 பேரை போலீஸார் நேற்று கைது செய்துள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/jZ5w3WI
0 Comments