Crime

சென்னை: மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர். சென்னையில் போதைப் பொருள் கடத்தல், பதுக்கல் மற்றும் விற்பனையை தடுக்க அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்கள் தலைமையிலும் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்களுடன் ஒருங்கிணைந்து போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீஸார் செயல்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், வேப்பேரி பேரக்ஸ் சாலையிலுள்ள விடுதி ஒன்றின் அருகே மெத்தம்பெட்டமைன் போதைப் பொருளை சிலர் ரகசியமாக விற்பனை செய்து வருவதாக கடந்த மாதம் 20-ம் தேதி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸார் அங்கு சென்று கண்காணித்தனர். அப்போது, அந்த பகுதியில் சந்தேகப்படும்படி நின்றிருந்த 4 பேரை பிடித்து விசாரித்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/cZs2RI8

Post a Comment

0 Comments