Crime

சண்டிகர்: ஹரியானாவின் பஞ்ச்குலாவில் டேராடூனைச் சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டனர். செக்டார் 27-ல் உள்ள ஒரு வீட்டுக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த காருக்குள் இருந்து அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன.

டேராடூனைச் சேர்ந்த பிரவீன் மிட்டல், பஞ்ச்குலாவில் உள்ள பாகேஷ்வர் கோயிலுக்கு தனது குடும்பத்தினருடன் ஒரு ஆன்மிக நிகழ்வில் கலந்து கொள்ள வந்துள்ளார். நிகழ்வு முடிந்து பிரவீன் குடும்பத்தினர் டேராடூனுக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது ஞாயிற்றுக்கிழமையன்று இந்த சம்பவம் நடந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/mrPoVxW

Post a Comment

0 Comments