
சென்னை: ஆன்லைன் டிரேடிங்கில் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் தருவதாக ரயில்வே ஊழியரிடம் ரூ.22.72 லட்சம் பறிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை செம்பியத்தைச் சேர்ந்தவர் ரயில்வே ஊழியர் டில்லிபாபு (35). இவருக்கு சாட்டிங் செயலி மூலம் கடந்த ஜனவரி 13-ம் தேதி நண்பர் ஒருவர் அறிமுகமானார். இந்நிலையில் இவர், தான்ன் கூறும் ஆன்லைன் டிரேடிங் நிறுவனத்தில் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் பெறலாம் என ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதை உண்மை என நம்பிய டில்லிபாபு, அந்த நபர் தெரிவித்த நிறுவனத்தில் ஆன்லைன் முதலீடு செய்ய சுயவிவரம், வங்கி விபரம், ஆதார் விபரம் உள்பட பல்வேறு விபரங்களைப் பதிவு செய்துள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/DI7ds6z
0 Comments