
சென்னை: மாணவர்களை குறிவைத்து போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். போதைப் பொருள் கடத்தல், பதுக்கல், விற்பனையில் ஈடுபடுவோரை கைது செய்ய சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து, போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீஸார், சட்டம் ஒழுங்கு போலீஸாருடன் ஒருங்கிணைந்து கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், மாணவர்கள், இளைஞர்கள், ஐடி ஊழியர்களை குறிவைத்து சிலர் ஐஸ்அவுஸ் பகுதியில் மெத்தம்பெட்டமைன் என்ற வகை போதைப் பொருளை விற்பனை செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/MgIoFHx
0 Comments