
கிண்டி கத்திபாரா மேம்பாலம் அருகே நடிகர் பாபி சிம்ஹாவின் கார் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 4 பேர் படுகாயம் அடைந்தனர். ஓட்டுநரைக் கைது செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை பெரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் முத்துசாமி (42). இவர் ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து இருசக்கர வாகனத்தில் கத்திப்பாரா மேம்பாலம் அருகே நேற்று முன்தினம் இரவு சென்று கொண்டிருந்தார். அப்போது, அவருக்கு பின்னால் வேகமாக வந்த சொகுசு கார் இருசக்கர வாகனம் மீது மோதியது. தொடர்ந்து நிற்காமல் அந்த கார் அடுத்தடுத்து சாலையில் சென்ற 2 இருசக்கர வாகனங்கள், ஆட்டோ, கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ZGFrIOn
0 Comments