
சென்னை: சிறுவனை நாய் கடித்த விவகாரத்தில் தட்டிக் கேட்ட தாய் மீது நாயின் உரிமையாளர் தாக்குதல் நடத்தியதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை மயிலாப்பூர் விசாலாட்சி தோட்டம் பகுதியை சேர்ந்தவர் ஜீனத் (40). இவரது மகன் முகமது ஜமால் (12). இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் ஜமால் தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஒருவர் வளர்க்கும் நாய், ஜமாலை கடித்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2mxWzOb
0 Comments