
மதுரை: தஞ்சை நடுக்காவேரியில் சகோதரிகள் விஷம் குடித்த விவகாரத்தில் தனது சகோதரர், சகோதரியை கைது செய்ததால் போலீஸாரை மிரட்ட விஷம் குடித்ததாக உயர் நீதிமன்றம் அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம் நடுக்காவேரியைச் சேர்ந்த துர்கா, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: 'எனது சகோதரிகள் மேனகா, கீர்த்திகா, சகோதரர் தினேஷ். என் சகோதரர் தினேஷ், தஞ்சை மாவட்ட தேவேந்திர குல வேளாளர் சங்க செயலாளராகவும் இருக்கிறார். எங்கள் தெருவில் வசிக்கும் அருண்குமார் போலீஸார் உதவியுடன் டாஸ்மாக் மதுவை சட்ட விரோதமாக பள்ளி மாணவர்களுக்கும் விற்று வந்தார். இதை என் சகோதரர் கண்டித்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Ga2iZew
0 Comments