Crime

சென்னை: நகைக்கடை அதிபரிடம் ரூ.1 கோடி மதிப்புள்ள தங்க நகைகளை பெற்று மோசடி செய்ததாக நகை விற்கும் முகவர் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக உள்ள அவரது சகோதரரை போலீஸார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

சென்னை, வேப்பேரியில் வசிப்பவர் லஷ்மண்குமார் (44). சவுகார்பேட்டையில் சிவம் ஜுவல்லர்ஸ் என்ற பெயரில் நகைக்கடை நடத்தி வருகிறார். தங்க நகை மொத்த வியாபாரத்திலும் ஈடுபட்டுள்ளார். இவரது நகைக் கடையில் கமிஷன் ஏஜென்டாக தர்மேஷ் ஜெயின் என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த ஆண்டு டிசம்பர் 14-ம் தேதி லஷ்மண்குமார் சுமார் ரூ.1 கோடி மதிப்புள்ள 177 பவுன் நகைகளை தர்மேஷ் ஜெயினிடம் கொடுத்து வாடிக்கையாளர் குல்திப்ராவல் என்பவரிடம் ஒப்படைக்குமாறு கூறியுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/4a7CONv

Post a Comment

0 Comments