Crime

மதுரையில் தனியார் பள்ளி மாணவிக்கு சீருடை தைக்க அளவு எடுத்தபோது பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக 2 டெய்லர்கள் மற்றும் ஓர் ஆசிரியை ஆகியோர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டனர்.

மதுரை ஜெய்ஹிந்த்புரம் அருகேயுள்ள எம்கே.புரத்தில் தனியார் மெட்ரிக் பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கான சீருடைகளை தைக்கும் பணியில் ஆண் டெய்லரை ஈடுபடுத்தி உள்ளனர். சில நாட்களுக்கு முன்பு 10-ம் வகுப்பு மாணவி ஒருவருக்கு சீருடை தைக்க அளவெடுத்த ஆண் டெய்லர், பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும், இதற்கு பெண் டெய்லர் உடந்தையாக இருந்ததாகவும் சர்ச்சை எழுந்தது. அந்த டெய்லரிடமே அளவெடுக்க வேண்டும் என்று ஆசிரியை ஒருவர் கட்டாயப்படுத்தியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/aFCMUty

Post a Comment

0 Comments