
சென்னை: அண்ணா சாலையில் பைக் ரேஸில் ஈடுபட்ட இளைஞர்கள் 14 பேர் பிடிபட்டனர். அவர்களது பெற்றோர் முன்னிலையில் போலீஸார் எழுதி வாங்கிக் கொண்டு எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
இளைஞர்கள் சிலர் அவ்வப்போது முக்கிய சாலைகளில் பைக் ரேஸில் ஈடுபட்டு வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அவர்களை சென்னை போக்குவரத்து போலீஸார் அடையாளம் கண்டு கைது செய்வதோடு, வாகனத்தையும் பறிமுதல் செய்து வருகின்றனர். இதனால், ரேஸ்கள் வெகுவாக குறைந்துள்ளன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/85tZlcq
0 Comments