
மீரட்: உ.பி.யின் மீரட் நகரில் லண்டனில் இருந்து திரும்பிய கப்பல் அதிகாரி ஒருவர் கொலை செய்யப்பட்டார். அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி மறைத்து வைத்த அவரது மனைவி மற்றும் அவரது காதலனை போலீஸார் கைது செய்துள்ளனர்.
மீரட் நகரின் பிரம்மபுரி பகுதியில் உள்ள வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக போலீஸாருக்கு அருகில் வசிப்பவர்கள் நேற்று முன்தினம் தகவல் அளித்தனர். இதையடுத்து போலீஸார் அங்கு சென்று ஆய்வு செய்ததில் சிமென்ட் நிரப்பிய ட்ரம் ஒன்றில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட ஆணின் சடலம் மறைத்து வைக்கப்பட்டிருப்பதை கண்டறிந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/PchXMy9
0 Comments