
மன்னார்குடி அருகே மூதாட்டியை வாட்ஸ்அப் வீடியோ காலில் அழைத்து, சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டிருப்பதாக சிபிஐ பெயரில் மிரட்டி, ரூ.21 லட்சம் மோசடி செய்த கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகேயுள்ள திருமக்கோட்டையைச் சேர்ந்தவர் பைரவமூர்த்தி மனைவி திலகவதி(70). ஓய்வுபெற்ற அரசு ஊழியரான இவரது கணவர் உயிரிழந்துவிட்ட நிலையில், 2 மகள்களும் திருமணமாகி குடும்பத்துடன் வெளிநாட்டில் வசித்து வருகின்றனர். இதனால், திலகவதி தனியாக வசித்து வருகிறார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/HtCLviE
0 Comments