
மதுரை: ரூ.80 ஆயிரம் பணத்துகாக சிவகங்கை தனிப்படை காவலரை அடித்துக் கொன்று தீயிட்டு எரித்த ஆட்டோ ஓட்டுநரை போலீஸார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்து கைது செய்தனர்.
விபத்தில் இறந்த மனைவி: விருதுநகர் மாவட்டம், முக்குளம் அருகிலுள்ள அழகாபுரி கிராமத்தைச் சேர்ந்தவர் மலையரசன் (35). இவர், சிவகங்கை காளையார்கோவிலில் தனிப்படை காவலராக பணிபுரிந்தார். இவரது மனைவி பாண்டிச்செல்வி (33) இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சுழி பகுதியில் நடந்த உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு டூவீலரில் மனைவியுடன் மலையரசன் திரும்பியபோது, மானாமதுரை அருகே வாகன விபத்தில் சிக்கி அவரது மனைவி உயிரிந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/mBgUcY5
0 Comments