
பாட்டி, பெண் தோழி, தம்பி உட்பட 5 பேரை இளைஞர் ஒருவர் வெட்டிக்கொலை செய்த சம்பவம் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடந்துள்ளது. கொலைச் சம்பவங்களுக்குப் பின்னர் போலீஸ் நிலையத்தில் சரணடைந்த இளைஞர் எலிமருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் புறநகர்ப் பகுதியான வெஞ்சரமூடுவில் வசிப்பவர் அஃபான் (23). இவர் நேற்று முன்தினம் அப்பகுதியிலுள்ள போலீஸ் நிலையத்துக்குச் சென்று சரண் அடைந்தார். அவர் போலீஸாரிடம் கூறும்போது, தனது தாய், பாட்டி, பெண் தோழி, 13 வயது தம்பி உட்பட 6 பேரை கொலை செய்துவிட்டேன் என்றார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/XNT92eq
0 Comments