Crime

ராமேசுவரம்: ராமேசுவரத்தில் கொலை செய்யப்பட்ட மீனவரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் தனுஷ்கோடி நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ராமேசுவரம் தெற்கு கரையூரில் நான்கு மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற கோயில் திருவிழாவில் இரண்டு பிரிவினருக்குள் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது. நேற்று இரவு, தெற்கு கரையூர் பூமாரியம்மன் கோயில் அருகே ஒரு பிரிவைச் சேர்ந்த நம்புக்குமார் (35), சேதுபதி, சத்ரியன், விஜி, சூர்ய பிரகாஷ் ஆகிய ஐந்து பேர் பேசிக்கொண்டிருந்த போது, மற்றொரு பிரிவைச் சேர்ந்த சொகேஸ்வரன், ஜீவித், கார்த்திகரன், ரஞ்சித்குமார், கருணாகரன், ஐயன்சங்கரன் குமார், செல்வராஜ் உள்ளிட்ட 11 பேர் கும்பலாக வந்து நான்கு பேர் மீது தாக்குதல் நடத்தினர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/opuvVdk

Post a Comment

0 Comments