
புதுச்சேரியை சேர்ந்த சிறுமி ஒருவர் சமூக வலைதளங்களில் ஆர்வமாக இருந்துள்ளார். குறிப்பாக இன்ஸ்டாகிராம் செயலியை பயன்படுத்தி வந்துள்ளார். அறிமுகம் இல்லாத ஒரு இன்ஸ்டாகிராம் ஐடியில் இருந்து இவருக்கு நட்பு அழைப்பு வந்துள்ளது. இவர் அந்த நபருடன் நட்பாக பேசி பழகி உள்ளார்.
சிறிது நாட்களுக்குப் பிறகு அந்த நபர் அச்சிறுமியை காதலிப்பதாக கூறியுள்ளார். இந்தப் சிறுமி அந்த காதலை ஏற்க மறுத்துள்ளார். கோபமடைந்த அந்த நபர், ‘உனது போட்டோவை மார்பிங் செய்து சமூக வலைத்தளங்களில் அனுப்பி விடுவேன்’ என்று மிரட்டியுள்ளார். மேலும் அவரை ஆடையில்லாமல் வீடியோ கால் செய்யுமாறு மிரட்டியுள்ளார். பயந்து போன அந்த சிறுமி, இதுபற்றி பெற்றோரிடம் கூறியுள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/W9bvrdo
0 Comments