Crime

ராஜபாளையம்: மது போதையில் தகராறு செய்த இளைஞர்களை கலைந்து செல்லுமாறு அறிவுறுத்திய போலீஸாரை தாக்கிய வீடியோ வெளியாகி, ராஜபாளையத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக 8 பேரை கைது செய்த போலீஸார், மேலும் இருவரைத் தேடி வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பஞ்சு மார்க்கெட் நேரு சிலை அருகேயுள்ள தனியார் பார் முன் கடந்த 10-ம் தேதி இரவு இளைஞர்கள் சிலர் பிரச்சினை செய்து கொண்டிருந்ததாக, ராஜபாளையம் வடக்கு காவல் நிலையத்துக்குப் புகார் வந்தது. இதையடுத்து, தலைமைக் காவலர்கள் ராம்குமார், கருப்பசாமி ஆகியோர் அங்கு சென்று, பிரச்சினை செய்து கொண்டிருந்த இளைஞர்களை கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/spfm8yF

Post a Comment

0 Comments