
ராமநாதபுரம்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகேயுள்ள கருடாமுத்தூர் வி.வடமலைபாளையத்தைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம் (45). இவர், தனது உறவினர் தீபக் அரவிந்த் (26), நாகராஜன் (36), கார்த்திகேயன் (33) ஆகியோருடன் நேற்று முன்தினம் காரில் ராமேசுவரம் வந்துள்ளார். சுவாமி தரிசனம் முடிந்த பின்னர் நேற்று காரில் புறப்பட்டனர். மதுரை-தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில், ராமநாதபுரம் அருகே இடையர்வலசு பகுதியில் சென்றபோது, திடீரென சாலையோரமுள்ள சிறிய பாலத்தில் கார் மோதியது. இதில் சண்முகசுந்தரம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பலத்த காயமடைந்த தீபக் அரவிந்த், நாகராஜன், கார்த்திகேயன் ஆகியோர் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி தீபக் அரவிந்த், நாகராஜன் ஆகியோர் உயிரிழந்தனர். கார்த்திகேயன் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/uxn2CPW
0 Comments