
சென்னை: தமிழகத்தில் தீவிரவாத இயக்கத்துக்கு ஆள் சேர்த்த வழக்கில் 6 பேர் மீது பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் என்ஐஏ குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
சென்னையில் கடந்த ஜூன் மாதம் யூடியூப் சேனல் ஒன்றில், தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கத்துக்கு ஆதரவான கருத்துகள் இருந்ததை சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள சைபர் க்ரைம் போலீஸார் கண்டறிந்தனர். சென்னை ராயப்பேட்டையை சேர்ந்த ஹமீது உசேன் என்பவர், ‘டாக்டர் ஹமீது உசேன் டாக்ஸ்’ என்ற பெயரில் அந்த யூடியூப் சேனல் மூலம் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்துக்கு ஆதரவாக பேசி, மூளைச் சலவை செய்து இளைஞர்களை திரட்டியது தெரியவந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/F8jJS34
0 Comments