Crime

திருப்பதியில் இஸ்கான் கோயில் மற்றும் வெளிநாட்டினர் தங்கும் நட்சத்திர ஓட்டல்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் தொடர்ந்து வருகிறது. இதுகுறித்து திருப்பதி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வெளி நாடுகளிளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இவர்கள் திருப்பதி மற்றும் திருமலையில் தங்கி, சுவாமியை தரிசித்துவிட்டு செல்கின்றனர். தற்போது புரட்டாசி மாதமும் பிரம்மோற்சவ விழாவும் முடிந்துள்ளன. ஆயினும் ஏழுமலையான் கோயிலில் பக்தர்களின் கூட்டம் தினமும் அலைமோதிய வண்ணம் உள்ளது. இந்நிலையில், திருப்பதியில் உள்ள இஸ்கான் மற்றும் வராக சுவாமி கோயில்களில் வெடிகுண்டு வைத்துள்ளதாக இ-மெயில் மூலம் மிரட்டல் வந்தது. ஆனால், திருப்பதியில் வராக சுவாமி கோயில் இல்லை என்பதால், திருப்பதி போலீஸார் உடனே இஸ்கான் கோயிலுக்கு மட்டும் சென்று, அங்கு சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்களை வெளியில் அனுப்பி, கோயில் முழுவதும் தீவிர சோதனை நடத்தினர். பின்னர் இது வீண் புரளி என்பது தெரியவந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/x5Vwbvh

Post a Comment

0 Comments