
சென்னை: சென்னையிலிருந்து இலங்கைக்கு போதைப் பொருள் கடத்த முயன்ற இருவரை மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.27 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னையில் போதைப் பொருள் கும்பலின் நடமாட்டம் உள்ளதாக மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அக்கும்பலை கைது செய்ய, சென்னை மண்டல போதைப் பொருள் தடுப்பு பிரிவு இயக்குநர் (எஸ்.பி) அரவிந்தன் உத்தரவிட்டார். அதன்படி, தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீஸார் கடந்த 22-ம் தேதி மூலக்கடை பேருந்து நிலையம் அருகே ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/9nKqFQN
0 Comments