
சென்னை: தங்க மோதிரத்தை அடமானம் வைத்து, அந்த பணத்தில் மது அருந்திய தந்தையை அடித்து கொலை செய்த மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை மேற்கு மாம்பலம் விநாயகம் தெருவை சேர்ந்தவர் வெங்கடேஷ் (45). கார் ஓட்டுநராக பணி செய்துவந்தார். இவருக்கு மனைவியும், மகன் மற்றும் மகள் உள்ளனர். மகள் நர்சிங் படித்து வருகிறார். மகன் சுனில்குமார் (19) உணவு விநியோக ஊழியராக தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். வெங்கடேஷ் மது போதைக்கு அடிமையானவர் என கூறப் படுகிறது. இதனால் சரிவர வேலைக்கு செல்லாமல் தினமும் குடித்துவிட்டு வந்து தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/FbYGUVy
0 Comments