
சென்னை: மாநகராட்சி அதிகாரிகள் என கூறி ரூ.9 லட்சம் பறிக்க முயன்ற கும்பலை சேர்ந்த 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்தவர் கவுஷர் பாய். இவர், சென்னை சவுகார்பேட்டையில் சொந்தமாக நகைப்பட்டறை நடத்தி வருகிறார். இவரது நகைக்கடைக்கு டிப்-டாப் உடை அணிந்து வந்த 5 பேர், தங்களை சென்னை மாநகராட்சி அதிகாரிகள் என அறிமுகம் செய்து கொண்டனர். உரிய அனுமதி இன்றி நகைப்பட்டறை செயல்படுவதாக புகார்கள் வந்துள்ளது. எனவே, நாங்கள் சோதனை செய்ய வேண்டும் என கவுஷர் பாயிடம் தெரிவித்தனர்.
இதையடுத்து, நகைப்பட்டறையை சோதிக்க உரிமையாளர் அனுமதி அளித்துள்ளார். இதை சற்றும் எதிர்பாராத 5 பேரும், ‘‘நாங்கள் மாநகராட்சி அதிகாரிகள் அல்ல வழக்கறிஞர்கள். நீங்கள் வங்கிக்கு செலுத்த வேண்டிய கடன் தொகை ரூ.7 லட்சம், வழக்கறிஞர் கட்டணம் ரூ.2 லட்சம் என மொத்தம் ரூ.9 லட்சம் தரவேண்டும். இல்லை என்றால் நகைப்பட்டறையை நடத்த முடியாது’’ என மிரட்டியுள்ளனர். கவுஷர் பாய்க்கு தமிழ்சரியாக தெரியாததால் இருதரப்பினருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ceLd4Dk
0 Comments